சமந்தா சினிமாவை விட்டு வெளியேற போவதாக தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samantha Says Bye to Cinema : தமிழ் பெண்ணாக இருந்து தெலுங்கு பெண்ணாக மாறி, தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் தற்போது தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள நடிகை சமந்தா அடுத்து நடிக்கவிருக்கும் படத்துடன் சினிமாவை விட்டு வெளியேற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2018 அக்டோபர் 6-ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் மணம் புரிந்துக் கொண்டார் சமந்தா.
திருமணம் முடிந்த பிறகும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு நடித்த ” யூ-டர்ன், சீமராஜா மற்றும் நடிகையர் திலகம் ” ஆகிய படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது.
அஜித், விஜய் ரசிகர்கள் எல்லாம் ஓரமா போங்க… மாஸ் காட்டிய சமந்தா ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்.!
இதனை தொடர்ந்து, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது ” ஓ பேபி ” படம்.
இந்த படத்திற்கு பிறகு தமிழில் வெளியாகி நல்ல வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவென்றால் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 96 படத்துடன் சினிமா துறையை விட்டு வெளியேற போவதாகவும், தனது குடும்ப வாழ்வில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்டுத்தான் சமந்தா ரசிகர்கள் சோகம் கலந்த ஆச்சர்யத்தில் உள்ளனர்.
மேலும் சமந்தா நிரந்தரமாக சினிமா உலகை விட்டு வெளியேற போவது இல்லை என்றும் சிறிது கால இடைவேளைக்கு பிறகு மீண்டும் படங்கள் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது, சமந்தா மீண்டும் நடிக்க வாய்ப்பு உள்ளது என்ற செய்தி மட்டுமே சமந்தா ரசிகர்களின் தற்போதைய ஆறுதல்.