கடைசியில் நாய் பூனையோட தான் சாக போறீங்க என கூறிய ரசிகருக்கு சமந்தா அதிரடி பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வரும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு வருடங்கள் வாழ்ந்த நிலையில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இதனையடுத்து சமந்தா தொடர்ந்து செல்லப்பிராணிகள் லோடு நேரத்தை செலவிட்டு மனதிற்கு ஆறுதல் தேடி வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நாய்க்குட்டி மற்றும் போன குட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் கடைசியில் நாய், பூனையோட தான் செத்து கிடக்க போறீங்க என பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த சமந்தா ஒருவேளை அப்படி நடந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என பதிவு செய்துள்ளார். உடனே அந்த ரசிகர் தன்னுடைய கமெண்ட்டை டெலிட் செய்து உள்ளார்.

ஆனாலும் இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். சமந்தா தரமான பதிலடி கொடுத்திருப்பதாக கூறி வருகின்றனர்.

https://twitter.com/Saravan_2255/status/1530076876256882688?t=kvLhZg7Oid514GzcCXOaSQ&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.