சமந்தா நாக சைதன்யா விவாகரத்து திடீர் திருப்பம் ஏற்பட்டதாக வெளியான தகவல் பற்றிய செய்திகள் வெளி வந்துள்ளன.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிகர் நாகசைத்தான்யாவை 10 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
விவாகரத்துக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா கவர்ச்சிக்கும் ஓகே சொல்லி வருகிறார். இந்த நிலையில் அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் போட்டோ வெளியிட்டு தெரிவித்து இருந்தார். இதனால் பலரும் சமந்தா பூரண குணம் பெற வேண்டும் என ஆறுதல் கூறி வந்த நிலையில் நாகசைத்தான்யாவை சமந்தாவை சந்தித்ததாகவும் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் பரவியது.
ஆனால் இது உண்மை இல்லை வெறும் வதந்தி இந்த வதந்திக்கு நடிகை சமந்தா விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என தற்போது தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் சேரப்போகும் சந்தோஷத்தில் இருந்த ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நடிகை சமந்தா விரைவில் குணம்பெற வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.