நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதற்றத்துடன் இருக்கும் எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் தமன்னா. இவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாளை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மொழிகளில் யசோதா திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மணி சர்மா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரமோஷனில் எமோஷனலாக பேசியிருந்த சமந்தாவின் வீடியோ சமீபத்தில் வைரலானது. அதேபோல் நாளை யசோதா படம் வெளியாக இருக்கும் நிலையில் சமந்தா இன்ஸ்டாகிராமில் பதட்டமாக இருப்பதாக லேட்டஸ்டாக எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியீட்டு பதிவிட்டுள்ளார் அது தற்போது வைரலாகியுள்ளது. அதில் அவர், ” நான் ரொம்ப பதட்டமாக இருக்கிறேன். அதேவேளையில் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளேன். இன்னும் ஒரு நாள் தான் நாளை யசோதா படம் வெளியாகிறது. நல்ல மகிழ்வோடு என் இயக்குனர், தயாரிப்பாளர் & படக்குழு அனைவரும் உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.