18 பிளஸ் கேள்விகளுக்கு கூச்சமில்லாமல் சமந்தா பதிலளித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி காபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில் இதுவரை பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள சீசனில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
அதற்கு அடித்தளமாக முதல் ஆளாக நடிகை சமந்தா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இதுவரை இல்லாத அளவு இந்த முறை நிகழ்ச்சியில் 18+ கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டுள்ளன.
சமந்தாவும் எந்தவித கூச்சமும் இல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த நிகழ்ச்சி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.