நடிகை சமந்தா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருப்பதாக டோலிவுட் பத்திரிகைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் தெலுங்குவிலும் பிரபலமானவர் சமந்தா, இவர் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமந்தா தொடர்ந்து நாகசைதான்யாவின் குடும்ப விழாக்களை புறக்கணித்து வருகிறார். நாகார்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இதில் சமந்தா கலந்து கொள்ளவில்லை.
அதே போல் நாகர்ஜூனாவின் குடும்ப விழாவான அக்கினேனி தேசிய விருது விழா நடைபெற்றுள்ளது. இதிலும் சமந்தா கலந்து கொள்ளவில்லை. பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதனால் சமந்தாவிற்கும் நாகசைதான்யாவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் சமந்தா தன்னுடைய கணவரை பிரிய முடிவெடுத்து இருப்பதாகவும் டோலிவுட் பத்திரிகைகளில் தகவல்கள் பரவி வருகின்றன.
உண்மை என்ன என்பதை சமந்தாவும் அவரது கணவரும் தான் கூற வேண்டும்.