டாப் நடிகரோடு ஜோடி சேர்ந்து ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார் சமந்தா.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு வருடங்களில் அவரை விவாகரத்து செய்து விட்டார்.
விவாகரத்துக்கு பிறகு படங்களில் கிளாமராக நடித்து வரும் சமந்தா புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டார். இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த பாடலுக்கு நடிகை சமந்தா அக்ஷய்குமார் உடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்று ஆட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோவில் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.