நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான தகவலுக்கு சமந்தா பதில் அளித்துள்ளார்.
Samantha Clarification On Divorce Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. என்னைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா உடன் இணைந்து நடித்தபோது அவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அந்த நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.
திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை குழந்தை பெற்று கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்னரே விட தற்போது அதிக கவர்ச்சி காட்டவும் தொடங்கியுள்ளார்.
477 சிறுவர்-சிறுமியர் மீட்பு : மத்திய ரயில்வே தகவல்
இதனால் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை என பேசப்பட்டு வந்தது. இப்படியான நிலையில்தான் சமந்தா சமூகவலைதளங்களில் சமந்தா அக்கினெனி என இருந்த தன்னுடைய பெயரை முற்றிலுமாக மாற்றினார். இதனால் இருவருக்கும் இடையே மனக் கஷ்டம் உருவாகி இருப்பதை உறுதி என பேசப்பட்டது.
மேலும் சமீபத்தில் சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கோவாவில் ஒரு மிகப்பெரிய இடத்தை வாங்கி பண்ணை வீடு ஒன்றை கட்டும் முயற்சியில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் இறங்கியுள்ளனர்.
புதிய சாதனை படைத்த Suriya-வின் Soorarai Pottru! – குவிந்த விருதுகள்
இந்த தகவலை வெளியிட்ட சமந்தா கணவரை விவாகரத்து செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார். இருவருக்கும் சூட்டிங் இல்லாமல் நேரம் கிடைக்கும் போது இந்த கோவா கடற்கரை வீட்டில் நேரத்தை செலவிட இது ஒரு பண்ணை வீடு கட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.