Samantha Akkineni : கணவனுக்கு தெரியாமல் காதலுடன் உறவு வைத்து கொண்டால் தவறா? தவறில்லையா? என்பது குறித்து சமந்தா ஓபனாக பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் இறுதியாக ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா பாலாகுமாரா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கணவனுக்கு தெரியாமல் கல்லூரி காதலனுடன் உறவு வைத்து கொள்ளும் பெண்ணாக நடித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதே சமயம் சமந்தாவின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது சமந்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் உறவு வைத்து கொண்டால் அது தவறில்லை. அவள் தப்பானவளும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் வேம்பு கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தது. அப்படி வெறுத்தவர்களே இறுதியில் பரிதாபப்படுவார்கள். அப்படி தான் இந்த கதாபாத்திரம் அமைந்திருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் வேம்பு கதாபாத்திரத்தில் நடிக்க தன்னம்பிக்கை வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.