தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

திருமணத்திற்கு முன்பு வரை அடக்கமாக நடித்து வந்த சமந்தா அதன் பின்னர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கியதும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்ததும் இந்த விவாகரத்து பிரச்சனைக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில் தற்போது நடிகை சமந்தா முதன் முறையாக விவாகரத்து குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆமாம் காபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதல் ஆளாக பங்கேற்றுள்ள சமந்தா தன்னுடைய விவாகரத்து குறித்து முதன் முறையாக ஓப்பனாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனை பற்றி அடுத்த மாதம் ஒளிபரப்பாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.