Salman Khan : பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.
இப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்பவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாகத்தான் ஒப்பந்தமானார் டெய்சி.
தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!
அவருக்கான மாற்றும் நடிகையை கடந்த சில நாட்களாக படக்குழு தீவிரமாக தேடி வந்தனர்.
அண்மையில் அந்த ரோலில் நித்யா மேனன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நாம் கூறியிருந்தோம்.
ஆனால் தற்போது அவருக்கு பதிலாக இந்த ரோலில் தன்னுடைய தோழியும் பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க சல்மான் கான் திட்டமிட்டு வருகிறாராம்.
இதற்காக ராஜமௌலியிடம் சிபாரிசும் செய்திருக்கிறாராம். இதனால் நித்யா மேனனும் அவருடைய ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட், சீதா எனும் கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
‘ஆர்ஆர்ஆர்’ எனும் தலைப்பிற்கான முழு அர்த்தம் என்னவென்பதை படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அது முடிவானதும் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.