Mohan Raj
பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாய் ச்லத்தில் கைது செய்யப்பட்ட காம கொடூரன் மோகன்ராஜ் பள்ளி மாணவிகளையும் விட்டு வைக்காதது தெரியவந்துள்ளது.

Salem mohanraj misbehave with school students – சேலத்தில் ஒரு பெண் கொடுத்த புகாரில் சமீபத்தில் கைதானவர் ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ். இவரின் செல்போனை சோதனை செய்ததில் இவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், பல பெண்களை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினர்.

இரவு நேரங்களில் தன்னுடன் தனிமையாக ஆட்டோவில் வரும் கல்லூரி பெண்கள் மற்றும் பெண்களுடன் பேச்சு கொடுத்து அவருடன் நட்பாக பழகி, அதன்பின் வீட்டுக்கு வரவழைத்து மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் அதை பதிவு செய்து அவர்களை தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதில் சிலரை நண்பர்களுக்கும் இரையாக்கியுள்ளார்.

auto driver

இவரின் ஒரு வீடியோ சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோவில் இருக்கும் பெண் அளித்த புகாரிலேயே மோகன்ராஜ் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். அதாவது, தனது கணவரை ஓரின சேர்க்கைக்கு மோகன்ராஜ் அழைத்ததாக அப்பெண் புகாரில் கூறியிருந்தார். ஆனால், மோகன்ராஜின் செல்போனை விசாரணை செய்த பின்னரே அவரின் காம கொடூர லீலைகள் போலீசாருக்கு தெரிய வந்தது. வீடியோவில் இருக்கும் அப்பெண்ணை மிரட்ட வீடியோ எடுத்த போது தான் சிக்கிக் கொண்டதாக மோகன்ராஜ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

புது சர்ச்சையில் பிகில் – படத்தின் ரிலீஸ்க்கு சிக்கல் .!

மோகன்ராஜும் அவரின் நண்பர் ஒருவரும் சேர்ந்து பல பாலியல் கொடூரங்களை அரங்கேற்றியுள்ளனர். இவர்கள் பள்ளி செல்லும் மாணவிகளை விட்டு வைக்கவில்லை. ஒருமுறை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 2 சிறுமிகளை தடுத்தி நிறுத்தி இருவரும் சேர்ந்து ஏற்காட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளனர். மாலை அவர்களை பள்ளி வாசலின் முன்பு விட்டு விட்டு சென்றுள்ளனர். தற்போது அந்த மாணவிகளின் பெற்றோர்களும் அதிர்ச்சி மற்றும் கலக்கம் அடைந்துள்ளனர்.