ரீமேக்குகளை இயக்குவது எளிது என்ற நம்பிக்கைக்கு மாறாக, பாபி சிம்ஹா நடித்த உறுமீன் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் எஸ்.பி.சக்திவேல், நேரடிப் படம் எடுப்பதை விட சவாலான பணி என்று நினைக்கிறார்.
மலையாளப் படமான விக்ருதியின் (2019) தழுவலான தனது சமீபத்திய வெளியீடான பயணிகள் கவனிக்கவும் (ஆஹா தமிழில் ஸ்ட்ரீமிங்) பற்றிப் பேசுகையில், “மலையாளத்தில் வெளியான விக்ருதி படத்தின் மையக் கதை (கொச்சி மெட்ரோவில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில்) என்னை மிகவும் கவர்ந்தது. தமிழ் பார்வையாளர்களின் உணர்வுக்கு ஏற்ப ஸ்கிரிப்டை மாற்றி அமைத்தேன். பயணிகள் கவனிக்கவும் திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைவருக்கும் நன்றி.” அதற்கு உறுதுணையாக இருந்த எனது குழுவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
“ஏற்கனவே வெளியான படத்தின் கதையை ரீமேக் செய்வது என்றால் படைப்பாற்றலில் கவனம் செலுத்துவது குறைவு என்று அர்த்தமல்ல. ரீமேக் படங்கள் ஒப்பிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. “ரீமேக்கில் பணிபுரியும் போது அசலில் இருந்து எதையாவது நகலெடுப்பது அல்லது பின்பற்றுவது என்ற எண்ணத்தை நான் ஏற்கவில்லை. உதாரணமாக, பயணிகள் கவனியுங்கள், மலையாள பதிப்பின் ஃபிரேம்-டு-ஃபிரேம் அப்படியே இருக்காது. ஸ்கிரிப்ட் முதற்கொண்டு இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் கவனிக்கவும் படத்தில் இடம்பெறும் ரயில் காட்சிகள “கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக சென்னையில் படமாக்க முடியவில்லை. ஜெய்ப்பூர் மெட்ரோவில் மூன்று நாட்களில் படமாக்கினோம். நடிகர்கள் விதார்த் மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் சைகை மொழியில் 15 நாட்கள் பட்டறையில் பயிற்சி பெற்றனர்.. மேலும், படப்பிடிப்பில், எங்களுக்கு உதவியாக பயிற்றுவிப்பாளர் ராமகிருஷ்ணன் இருந்தார். இந்த நேரத்தில் அவருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.
ஏற்கனவே நாங்கள் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருந்தோம். ஆனால் கொரானாவால் அந்த படம் கைவிடப்பட்டது.. “விதார்த் என் நல்ல நண்பர். பொதுவாகவே நிறைய ஸ்கிரிப்ட் பற்றி விவாதிப்போம். இரண்டு பேரும் ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டோம், அப்போதான் விக்ருதியை ரீமேக் செய்யணும்னு நினைச்சோம். ஆஹா தமிழ் வந்ததும் எல்லாமே கைக்கு வந்தது. . விதார்த் நல்ல சினிமா ரசிகன், நல்ல ஸ்கிரிப்ட்களை தேர்வு செய்வதில் வல்லவர். நல்ல படம் யாராவாது பண்ணினா, தேடி போய் பாராட்டுவாரு. அவருக்குள்ள உள்ள அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.