அபிராமியை வெளியேற்றுவதற்காக போட்டியாளர்கள் அடம்பிடித்ததாக கூறியுள்ளார் சாக்க்ஷி அகர்வால்
Sakshi Agarwal Interview About Abirami : சென்ற வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறியது அபிராபி என்பது எந்த விதத்திலும் ஹவுஸ் மேட்டுக்குகளுக்கும், ரகிகர்களுகளும் அதிர்ச்சியை அளிக்கவில்லை.
அதற்கு காரணம் கடந்த சில வாரங்களாகவே அபிராமி தொடர்ந்து நாமினேட் செய்யப்படவே அபிராமியின் வெளியேற்றத்தை அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
அபிராமியின் இந்த வெளியேற்றத்தை பற்றி சாக்க்ஷி ஒரு பேட்டியில் கூறியது, அபிராமி வீட்டிற்குள் வந்த முதல் வாரத்திலேயே வீட்டில் இருந்த சேரன், பாத்திமா, சரவணன் மற்றும் வனிதா ஆகியோர் அபிராமி மிகவும் சுயநலத்துடன் இருப்பதாகவும் அவரை உடனே வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்.
மேலும், அபிராமி வந்த ஒரு வாரத்திற்கு அவருக்கு உடல்நிலையும் சரி இல்லாமல் போகவே அனைவரும் அபிராமியை வெளியேற்றியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை பற்றி பேட்டியாளர் கேட்கையில் அதனை பற்றி சொல்ல மறுத்துவிட்டார் சாக்க்ஷி.
மேலும் அபிராமியை பற்றி இப்படி பேசியது அனைத்தும் நல்இரவு 2,3 மணிக்கு நடந்தது, இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் விஜய் டிவி வெளியிடவில்லை என்பதையும் தெரிவித்தார்.