பட்டம் எல்லாம் வேண்டாங்க பாசமே போதும் என மலர் டீச்சர் சாய்பல்லவி பேசியுள்ளார். 

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பிறந்த இவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.

தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் நடனத்திற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.

தெலுங்கு பட ரசிகர்கள் இவருக்கு “லேடி பவர் ஸ்டார்” என்று பட்டம் வைத்து அழைக்கத் தொடங்கியுள்ளனர். பட்டப் பெயருடன் பேனர்கள், விழாக்களில் கோஷம் என அவரை வரவேற்கின்றனர். இதைப் பார்த்த சாய் பல்லவி அவர்களிடம் ‘என் பெயருக்கு முன் எந்தப் பட்டமும் வேண்டாம் மக்களின் அன்பு மட்டும் போதும்’. நான் சாதாரணமாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.