Sai Pallavi talks about Premam 2
Sai Pallavi talks about Premam 2

Sai Pallavi talks about Premam 2

பிரேமம் 2 எடுத்தால் நிச்சயம் அது புது கதையாகதான் இருக்கும். அதில் நடிக்க என்னை அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார் சாய் பல்லவி.

தமிழகத்தைச் சேர்ந்தவராக இன்று தென்னக அளவில் முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கிறார் சாய் பல்லவி.

முறைப்படி நடனம் பயிலவில்லை என்றாலும் தமிழ், தெலுங்கு தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கவனம் ஈர்த்த அவர், 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் ஆதர்ச நாயகியாக மாறினார்.

சந்திரமுகி பார்ட் 2 வருமா? புதிய படத்தால் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அல்போன்ஸ் புத்திரன் திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் இதில் நடிப்பீர்களா என கேட்டதற்கு, “ பிரேமம் 2 எடுத்தால் நிச்சயம் அது புது கதையாகதான் இருக்கும். அதில் நடிக்க என்னை அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்” என்றார் சாய் பல்லவி.