Sai Pallavi talks about NGK :
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,
முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாய் பல்லவி தங்கச்சியா இது? இவ்வளவு அழகா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார் அதில் செல்வராகவன் இப்படத்தின் படப்பிடிப்பில் யாருமே பேசக்கூடாது.
எந்தவித சத்தமும் இருக்கக்கூடாது என ஆரம்பத்தில் சொல்லியதாகவும் கடைசி நாள் படப்பிடிப்பு முடியும் வரை அதை அவர் கடைபிடித்து காட்டியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படப்பிடிப்பில் செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்து அதை எல்லோரும் பின்பற்றியது தனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக சாய் பல்லவி கூறியுள்ளார்.