Sai Pallavi Speech : Suriya | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

Sai Pallavi Speech :

செல்வ ராகவனால் சாய் பல்லவி நான் நடிப்பை விட்டு விடுகிறேன் என கதறி கதறி அழுதுள்ளார். இது குறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறியும் உள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்துள்ள திரைப்படம் NGK. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுலும் சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

படம் உலகம் முழுவதும் வரும் மே 31-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் சாய் பல்லவி அளித்துள்ள பேட்டியில் செல்வராகவன் நடிப்பை வர வைக்க படுத்திய பாட்டை பற்றி பேசியுள்ளார்.

ஒரு கச்சேரிக்கு செந்தில் கணேஷ், ராஜலஷ்மி வாங்கும் சம்பளம் – அவர்களே வெளியிட்ட உண்மை.!

செல்வா சார் எதிர்பார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் வரை நம்மை விட மாட்டார். ஒருமுறை என்னுடைய காட்சியை சொல்லி நடிக்க சொன்னார்.

நாள் முழுவதும் நடித்தும் அவர் எதிர்பார்த்த நடிப்பை என்னால் கொடுக்க முடியவில்லை. மறுநாளும் இதே தான் தொடரும் என கூறி விட்டு சென்று விட்டார்.

இதனால் நான் வீட்டிற்கு வந்ததும் எனக்கு நடிப்பு வரவில்லை, நான் நடிப்பை விட்டு விடுகிறேன் என கதறி அழுதேன்.

என் அம்மா தான் சமாதனப்படுத்தினார். மறு நாள் ஒரே டேக்கிலேயே நடித்து முடித்து விட்டேன் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.