தன்னுடைய மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு மூன்று சக்கர வண்டி வழங்கி உதவியுள்ளார் எஸ்.ஏ.சி.
தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் ஆலமரமாக விளங்கி வருபவர் எஸ்.ஏ சந்திர சேகர். இதுவரை 70 படங்களுக்கு மேலாக இயக்கியுள்ள இவர் விஜயின் தந்தை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
எப்போதும் சமூக சிந்தையுடன் படம் இயக்கும் எஸ். ஏ. சி தொடர்ந்து சமூக சேவைகளையும் செய்து வருகிறார். தற்போது சென்னை வடபழனி பகுதியில் உள்ள மாற்று திறனாளி ரசிகர் ஒருவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவருக்கு மூன்று சக்கர வண்டி வழங்கி உதவியுள்ளார்.
எஸ்.ஏ.சி-யுடன் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் விஜயின் முன்னாள் PRO-வுமான பி.டி செல்வகுமார் உடன் இருந்துள்ளார்.
இது குறித்து எஸ்.ஏ.சி பேசியதாவது ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தில் வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுவது வழக்கம், இந்த வருடம் மாற்று திறனாளியான இந்த இளைஞருக்கு உதவியுள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.
புகைப்படங்கள் இதோ :