Vijay Controversy : விஜய் ஒரு குற்றவாளி அவர் எப்படி அரசாங்கத்தை குற்றம் சொல்லலாம் என SAC-யின் உதவி இயக்குனர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் வெளுத்து வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தளபதி விஜய் சர்கார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதிமுக அரசை விமர்சனம் செய்து நடித்திருந்தார்.
இது குறித்து தற்போது SAC-யிடம் ஒரு சில படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்த நாஞ்சில் அன்பழகன் அளித்துள்ள பேட்டியில் விஜயை விமர்சனம் செய்துள்ளார்.
இவர் தற்போது அதிமுக கட்சியில் ஒரு பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் விஜய் வாங்கும் சம்பளத்தில் 60% கருப்பு பணம் தான். 40% தான் வெள்ளை பணமாக வாங்குகிறார்.
நான் SAC-யிடம் உதவி இயக்குனராக இருந்ததால் அவரின் உண்மை முகம் எனக்கு தெரியும். SAC விஜயை வைத்து நிறைய சம்பாதிக்க ஆசைப்பட்டார். சம்பாதித்து விட்டார்.
தற்போது முதல்வராகி பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இது மிகவும் பேராசை. அரசுக்கு தெரியாமல் கருப்பு பணத்தை சம்பளமாக வாங்கும் விஜய் எப்படி ஆளும் அரசை விமர்சிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் ஒரு விரல் நீட்டி குற்றம் கூறினால் அவருடைய மூன்று விரல் அவரை நோக்கி குற்றவாளி என காட்டும் என கூறியுள்ளார்.