SAC About Sathankulam Murder
SAC About Sathankulam Murder

சாத்தான் குளம் சாத்தான்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென எஸ்ஏசி கூறியுள்ளார்.

SAC About Sathankulam Murder : கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தின் இந்த வைரஸ் தாக்குதலுக்கு நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சாத்தான் குளத்தில் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததற்காக அப்பா, மகன் என இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று அடித்தே கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கு உடனடியாக தண்டனை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

மாஸ்டர் ரிலீஸ் குறித்து விஜய் அதிரடி கருத்து – பிரபல பத்திரிக்கை வெளியிட்ட தகவல்!

இந்த நிலையில் தற்போது இயக்குனரும் தளபதி விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கூட அதிலிருந்து மீண்டு வந்து விடுகின்றனர்.

ஆனால் இப்படிப்பட்ட போலீஸ்காரன் கிட்ட மாட்டேனா என்ன ஆகும்னு நினைத்து பார்க்கும் போது எனக்குள் ஒரு நடுக்கம் ஏற்படுகிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்த சாத்தான்குளம் சாத்தான்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை காப்பாற்ற நினைப்பவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என பேசியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இந்த சம்பவம் குறித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இவர் சும்மா விடவே கூடாது என கூறிய டயலாக் தற்போது ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video