சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும். இது நவீன காலம் என நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார். மேலும் அந்த காலத்தில் பெண்களை ஏன் ஐயப்பன் சன்னதிக்குள் அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதாவது ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சபரிமலை அடர்ந்த காடாக இருந்தது. இதனால் ஆண்கள் கோஷங்கள் போட்டு கொண்டே சென்று விடுவார்கள். பெண்களின் உதிர போக்கு மோப்ப சக்தியுள்ள விலங்குகளை இழுக்கும் அபாயம் இருப்பதால் பெண்களை அனுமதிக்கவில்லை என கூறியுள்ளார்.
ஆனால் இன்று நவீன காலமாகி விட்டது, பாதைகள் பழையபடி இல்லை. நீதிமன்றமும் பெண்களும் ஐயப்பன் சாமியை வழிபடலாம் என உத்தரவு பிறப்பித்து விட்டது. இனியும் பெண்களை தடுப்பது தவறானது என கூறியுள்ளார்.