தளபதி விஜய்க்கு சுயமா முடிவு எடுக்கத் தெரியாது அவரை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் என அவரின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
SA Chandrasekhar Interview About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கும் இவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொண்டு பல வருடங்கள் ஆகி விட்டதாக கூறப்பட்டு வருகிறது.
மேலும் சமீபத்தில் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியாக பதிவு செய்தார்.
எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு தளபதி விஜய் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருந்தார். என்னுடைய பெயரையும் ரசிகர்களையும் பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்திருந்தார்.
அதன் பிறகு எஸ் ஏ சந்திரசேகர் கட்சி ஆரம்பிக்கும் பணியை கைவிட்டார். பொங்கல் தினத்தில் அவரது பெயரில் கட்சி ஆரம்பித்து அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் நமக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய்க்கு சுயமாக முடிவெடுக்க தெரியாது, அவருக்கு கிடைத்த அப்பாவைப் போல யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்.
நான் செய்வது எல்லாம் விஜய்யின் நலனுக்காகத்தான் என பேசியுள்ளார்.மேலும் தளபதி விஜய்யை அனைவரும் சேர்ந்து ஏமாற்றி வருவதாகவும் அவருக்கு எதிராக பெரிய சதி நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் நமக்கு அளித்த முழு பேட்டி வீடியோ இதோ