ஆபத்தான விஷ வளையத்திற்குள் விஜய் சிக்கி இருப்பதாக அவரது பெயரில் வெளியான அறிக்கை அவர் வெளியிட்டது இல்லை எனவும் எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
SA Chandrasekhar About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தில் தளபதி விஜய் விஜய் மக்கள் இயக்கம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக சில ஆதாரங்கள் வெளியாகின.
இதனால் தளபதி விஜய் புதிய கட்சியை தொடங்கி விட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால் இந்த தகவல் வெளியான சிலமணி நிமிடங்களிலேயே தளபதி விஜய் தரப்பிலிருந்து அறிக்கை பறந்தது.
அந்த அறிக்கையில் என்னுடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் புதிதாக தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. ரசிகர்களும் அக்கட்சியில் இணைந்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் விஜய்யின் அம்மா ஷோபா அவர்கள் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி விட்டதாக புகார் அளித்தார். மேலும் விஜய்யும் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் பல ஆண்டுகளாக பேசுவதில்லை. இதை அரசியல் பேச வேண்டாம் என கூறியும் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் கேட்காததால் அவர் பேசுவதை நிறுத்திக் கொண்டார் என தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் எஸ் எஸ் சந்திரசேகர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜய் தற்போது ஒரு சிறிய விஷ வளையத்துக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.
அவரைச்சுற்றி அவருக்கு தெரியாமல் சில விஷயம் நடந்து வருகிறது. அவரைச் சுற்றி கிரிமினல்கள் சிலர் உள்ளனர். அவரை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரவே நான் முயற்சி செய்து வருகிறோம் என சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் வெளியிட்ட அறிக்கை கூட அவராக வெளியிட்டது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். விஜய் ஒரு விஷ வளையத்திற்குள் சிக்கியிருப்பதாக அவரது அப்பாவே தெரிவித்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.