RTO Statement on Chithra Suicide

சித்ராவின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்டிஓ விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.

RTO Statement on Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவர் ஹேம்நாத் கொடுத்த தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஆர்டிஓ விசாரணை முடிந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் சித்ரா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளவில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சித்ராவின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணம் இல்லை என்றால் வேறென்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.