ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா தன்னுடைய பாய்பிரண்டை சந்தித்ததாக கூறி அவரை கட்டியணைத்து இருப்பது போல புகைப்படம் வெளியிட்டு ஏமாற்றியுள்ளார்.

Roja Serial Priyanka With Boyfriend : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தொப்பி அணிந்த ஒருவர் கட்டி அணைத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலே அந்த பதிவில் என்னுடைய பாய்பிரண்டை சந்தித்து இருப்பதாக தெரிவித்தார். இதனால் யார் அந்த நபர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அறியாமல் செய்த பாவங்கள் நீங்க, ஓர் எளிய பரிகாரம்.!

இந்த புகைப்படம் வெளியான கொஞ்ச நேரத்தில் பிரியங்கா புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் மூலம் தான் தெரிய வந்தது அது ஆணில்லை பெண் தான். மேலும் அந்தப் பெண் ரோஜா வில்லி அக்ஷரா தான் என தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஏமாற்றி விட்டீர்களே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம் | Simbu, Venkat Prabhu