ரோஜா சீரியலில் பிரபல நடிகை ரி-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Roja Serial Aishwarya Re-entry : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா. மேலும் வில்லி கதாபாத்திரத்தில் ஷாமிலி என்பவர் நடித்து வருகிறார்.
தற்போது இவர் கர்ப்பமாக இருந்து வருவதாலும் நாளுக்கு நாள் கொரானா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் தன்னுடைய பாதுகாப்பிற்காக ரோஜா சீரியலில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
ஷாமிலி இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக இதற்கு முன்னதாக இதே கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஐஸ்வர்யா மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ஐஸ்வரியா நடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.