பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார், இதனை அவரது மனைவி உறுதி செய்துள்ளார்.
மணிரத்தினம் தற்போது தன்னுடைய வாழ்நாள் கனவான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
தற்போது முதற்கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவியும் கார்த்தியும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க மேலும் ஒரு நடிகராக ரியாஸ்கான் இணைந்துள்ளார்.
இதனை அவரது மனைவி உமா ரியாஸ்கான் உறுதி செய்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.