பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகரான ரியாஸ்கான் கடும் பயிற்சியில் இறங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது இப்படத்தின் படபிடிப்பு தொடங்கி விட்டதாகவும் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகரான ரியாஸ் கான் கமிட்டாகி இருப்பதாக அவரது மனைவியும் நடிகையுமான உமா கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ரியாஸ் கான் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சியில் இறங்கி தன்னுடைய உடலை கட்டு மஸ்தாக்கி வருகிறார்.
அந்த புகைப்படங்கள் இணையத்திலும் கசிந்துள்ளன.