பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள ரியோ ராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Rio Raj Last Tweet Before Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்று முதல் தொடங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ரியோ ராஜ் என 12 பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக இவர்கள் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இறுதியாக ரியோ ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த பதிவில் என்னுடைய முடிவு உங்களை ஏமாற்றலாம் ஆனால் என்னுடைய செயல்பாடுகள் உங்களை ஏமாற்றாது என கூறியுள்ளார்.
இதனால் ரியோ ராஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா? இல்லையா? என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.