அரசின் நல்ல திட்டங்களை விளக்கி வாகனங்களின் அணிவகுப்பு நடைபற்றுள்ளது.
Republic Day Celebration in Marina Beach : இந்தியாவில் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பாக மெரினாவில் குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். அதன் பின்னர் தமிழக அரசின் சாதனை திட்டங்களை விளக்கி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டு களித்தார். இந்த விழாவால் குடியரசு தின விழா மெரினா கடற்கரையில் களை கட்டியுள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.