பொன்னியன் செல்வன் படத்திலிருந்து மீண்டும் புதிய போஸ்டராக நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராயின் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான கல்கி புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கி வரும் படம் தான் “பொன்னியன் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, பிரகாஷ்ராஜ், பிரபு, போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டு இருந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்கவுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களை கவர்ந்து உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ.ஆர். ரகுமான் இசையில் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து இப்படத்தில் விக்ரம், ஆதித்ய கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், கார்த்தி, வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

அந்த வகையில் படக்குழு தற்போது ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு ஐஸ்வர்யா ராய்யின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ‘பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும்! என்று குறிப்பிட்டுள்ளனர்’. இதனை ரசிகர்கள் ஆர்வத்தோடு வைரலாக்கி வருகின்றனர்.