இறுதிகட்ட படபிடிப்பு எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உள்ளதாகவும் எப்போது படம் வெளியாகும் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Release Update on Etharkum Thuninthavan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய் பீம் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

செப்டம்பர் மாதத்தின் இறுதியில் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விடும் என கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க உள்ளது.

பாரா ஒலிம்பிக் : அரிய வாய்ப்பை இழந்து, தனிமையில் தமிழக வீரர் மாரியப்பன்

மேலும் இந்த படத்தினை இந்த வருட இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நட்புக்காக Sasikumar இதை செஞ்சு இருக்காரு! – Actor Robo Shankar Speech | Chennai Cars Care

சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியானது. அவருடைய அடுத்த படமான ஜெய் பீம் திரைப்படமும் நேரடியாக OTT-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவை எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலமாக திரையரங்குகளில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.