உண்மையில் பொங்கல் வின்னர் வாரிசா துணிவா என்ற பஞ்சாயத்துக்கு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த வருட பொங்கல் விருந்தாக விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
கடந்த ஜனவரி 16ம் தேதி வெளியான இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் சேர்த்து 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இருந்த போதிலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே இடையே பொங்கல் வின்னர் யார் என்ற பஞ்சாயத்து தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்படியான நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இரண்டு படங்களுமே பிளாக் பாஸ்டர் வெற்றி தான், உங்களது அருகில் உள்ள தியேட்டருக்கு சென்று படத்தை கண்டு களியுங்கள் என பதிவு செய்துள்ளது. துணிவு படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட வாரிசு படத்தை சென்னை உட்பட சில இடங்களில் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.