சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் சில தகவல்களை தெரிவித்துள்ளனர்.
Reason for Sushant Singh Rajput Suicide : இந்திய கிரிக்கெட் அணியின் தல எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் சுஷாந்த் சிங் ராஜ்புட்.
இந்தப் படத்தில் அப்படியே தோணியாகவே வாழ்ந்திருப்பார். அதன் பின்னர் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரத் தொடங்கிய இவர் இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சின்ன வயதில் ஏன் இந்த விபரீத முடிவு என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
மும்பை போலீஸ் சாரும் தற்கொலைக்கு காரணம் என்ன என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாகவே சுஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரின் மன உளைச்சலுக்கு காரணம் என்ன என்பது குறித்த அடுத்த கட்ட விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க சுஷாந்த் சிங் இறந்த நிலை இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகைப்படத்தை வெளியிட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையுலக பிரபலங்கள் கூறி வருகின்றனர்.