Pray_For_Nesamani என்ற ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டாக காரணம் என்ன? இந்த ட்ரெண்டிற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்தது யார் என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.
Reason For Nesamani Trending : தமிழகத்தை சேர்ந்த நெட்டிசன்கள் எந்தவொரு விசயமாக இருந்தாலும் அதனை இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ ட்ரெண்ட் செய்து விடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
இன்று கூட திடீரென Pray_For_Nesamani என்ற ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது, ஏன் இந்த ஹாஷ்டாக் ட்ரெண்டானது? என்பதே தெரியாமல் பலர் அவர்களது காமெடியான டிவீட்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ட்ரெண்டிற்கு யார் காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.வெளிநாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் சுத்தியல் புகைப்படத்தை வெளியிட்டு உங்கள் ஊரில் இது பெயர் என கேட்டுள்ளார்.
அதற்கு தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சுத்தியல் என பதில் சொன்னதோடு நிறுத்தாமல் கூடவே ப்ரண்ட்ஸ் பட காமெடிகளை அள்ளி தெளித்துள்ளார்.
இதனை பற்றி அறியாத அயல் நாட்டினர் அப்பறம் என்ன ஆச்சு என ஆர்வமாக கேட்க நேசமணியை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாக கூறியுள்ளார் தமிழக இளைஞர். அதன் பின்னர் Pray_For_Nesamani என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி அவர்களிடம் நேசமணிக்காக பிராத்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதனால் வெளிநாட்டில் ட்ரெண்டாக தொடங்கி இந்த ஹாஷ்டாக் இறுதியில் உலக அளவில் ட்ரெண்டாகி விட்டது.