Reason Behind Chithu Suicide

சித்ராவுக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஹேம்நாத் நீ செத்து தொலை என கூறியதால் சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Reason Behind Chithu Suicide : தமிழ் சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் வலம் வந்தவர் சித்ரா.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் இவர் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சித்ராவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் பெற்றோர்கள் திட்டவட்டமாக கூறி வந்தனர்.

போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில் நேற்றிரவு அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இப்படியான நிலையில் சித்ராவின் தற்கொலை முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 9ஆம் தேதி இரவு சித்ரா மற்றும் அவருடைய கணவருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது சித்ரா நீ இல்லாமல் இருக்க முடியாது என கூறியுள்ளார். அதற்கு ஹேம்நாத் நீ செத்து தொலை என கூறிவிட்டு ஹோட்டல் அறையை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் மனமுடைந்து போன சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.