
கணவனின் கொடுமை மற்றும் கரு கலைப்பு போன்றவை தான் சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் என பதிவு செய்துள்ளார் உமர் சந்து.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தைச் சார்ந்த பெண்ணான இவர் திரையுலகில் அறிமுகமான பிறகு தெலுகுவிலும் நடிக்க தொடங்கினார்.
முதலில் தமிழ் நடிகர் சித்தார்த்தை காதலித்து பிரேக்கப் செய்த சமந்தா பிறகு தெலுங்கு நடிகர் நாகசைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நான்கு வருடங்கள் நன்றாக வாழ்ந்த நிலையில் அதன் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் சென்சார் போர்டில் பணியாற்றி வரும் உமர் சந்து படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது சமந்தா விவாகரத்து பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது மிகவும் மோசமான கணவர் தான் நாக சைத்தான்யா, அவர் தன்னை உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் இதனால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்ததாக சமந்தா பேசியது போல தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
https://twitter.com/UmairSandu/status/1634906188512100352?t=O562WajC2mUBG0pngSh3sw&s=19