பாலாஜி முருகதாஸ் நடுராத்திரியில் யாஷிகாவை தவிக்க விட்டு தப்பி ஓடியதாக ஜோ மைக்கல் தெரிவித்துள்ளார்.
Real Face of Balaji Murugadoss : தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களில் ஒருவராக பாலாஜி முருகதாஸ் உள்ளே சென்றுள்ளார்.
போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசியபோது பாலாஜி முருகதாஸ் தன்னுடைய பெற்றோரைப் பற்றி பேசினார். அப்பா, அம்மா என இருவரும் போதைக்கு அடிமையானவர்கள். இரவு நேரத்தில் குடித்து விட்டு தன்னை அடிப்பார்கள். அம்மா ஒரு நாள் கூட எனக்கு சமைத்துக் கொடுத்தது இல்லை என கூறினார்.
அதுமட்டுமல்லாமல் பிள்ளையை வளர்க்க முடியாதுனா எதுக்கு குழந்தை பெத்துக்கறீங்க எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து பாலாஜி முருகதாஸ் பியரில் குளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி படு வைரல் ஆனது. இதனை பார்த்த ரசிகர்கள் யோக்கியம் மாதிரி பேசின. இது என்ன வேலை என அவரை திட்டித் தீர்த்தனர்.
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் நிறுவனம் ஒன்றை டுபாகூர் கம்பெனி என தெரிவித்தார். அதற்கு சனம் ஷெட்டி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து ஜோ மைக்கல் தன்னுடைய நிறுவனத்தைப் பற்றி தவறாக பேசிய பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் யாஷிகாவும் பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் இரவு ஒன்றாக வெளியே சென்றிருந்த போது விபத்து ஏற்படுத்திவிட்டு பாலாஜி தப்பி ஓடிவிட்டார். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் யாஷிகாவை இதில் சிக்க வைத்து விட்டார் எனக் கூறி உள்ளார்.
இதனையடுத்து நெட்டிசன்கள் ஒரு பெண்ணை நடுராத்திரியில் அப்படியே தவிக்க விட்டுச் செல்வது என விமர்சனம் செய்து வருகின்றனர்.