மூன்றாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என அமைச்சர் பேசியிருப்பது அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
RB Udhayakumar About 2021 Election : தமிழகத்தில் தற்போது புரட்சித்தலைவி அம்மா வழியில் வந்த அதிமுக அரசு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் தற்போதில் இருந்தே அனைத்து கட்சிகளும் தீவிரமாக அரசியல் வேலைகளில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழக அரசு மக்களுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
மேலும் அதிமுக அரசு மூன்றாவது முறையாக மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை பெறும் என பேசியுள்ளார். இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.