Ravindran Reply to Vanitha
Ravindran Reply to Vanitha

வனிதா கேட்ட பணத்தை கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவரது பிள்ளைகளைப் படிக்க வைக்க தயாராக இருப்பதாகவும் பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Ravindran Reply to Vanitha : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பரபரப்பாக பேசப்பட்ட வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

அவர் திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் என்பவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்து கொண்டார். இதனால் இவர்கள் திருமணத்திற்கு பல்வேறு சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.

கவினை வைத்து நட்புன்னா என்னன்ன தெரியுமா என்ற படத்தை தயாரித்து இருந்த ரவீந்திரன் வனிதாவின் திருமணத்திற்கு எதிராக பேசி இருந்தார். அதாவது வனிதா யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும் அதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் விவாகரத்து செய்யாமல் ஒருவர் இன்னொருவரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.

இதனால் கடுப்பான வனிதா என்னுடைய விஷயத்தில் இவர் ஏன் தலையிடனும்? இவருக்கும் பீட்டர் பால் முதல் மனைவி எலிசெபத்துக்கும் என்ன சம்பந்தம்? என பேசி வந்தார்.

இப்போதைக்கு மாஸ்டர் வேலைக்காவாது.. வேற பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ் – அந்த நடிகர் ஓகே சொல்வாரா?

மேலும் கவினை வைத்து 4 கோடியில் இவர் படம் எடுத்து இருந்தார். எனக்கு 4 கோடி எல்லாம் தேவையில்லை வெறும் 40,000 தருவாரா? எனவும் வாட்ஸ்ஆப் ஆடியோவில் கேட்டு இருந்தார்.

இதற்கு ரவீந்திரன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். வனிதா கேட்ட பணத்தை நான் தந்து விடுகிறேன். அவர் பிள்ளைகளையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுக்கிறேன்.

ஆனால் வனிதா இதையெல்லாம் மீடியா முன்பு கூற வேண்டும். என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். செய்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு வனிதாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.