நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகரின் வேண்டுகோள் படி அவரது நெஞ்சில் தனது கையெழுத்தை போட்டு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருக்கும் இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா தி ரைஸ் என்று அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறது.

தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரசிகர் ஒருவர் நெஞ்சில் ஆட்டோகிராப் போடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு முதலில் ராஷ்மிகா மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் ரசிகர் கட்டாயப்படுத்தியதால் வேறு வழியின்றி அவரது நெஞ்சில் ரஷ்மிகா ஆட்டோகிராப் போட்டு அவரது ஆசையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைய செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.