விஜய் சேதுபதியை காதலித்து விஜயை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக பிரபல நடிகை பேசியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் இன்னொரு படத்தில் நடித்தார்.
அதனையடுத்து தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்திலும் தெலுங்குவில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது இவர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போது தமிழ் சினிமாவில் யாரை காதலிக்க ஆசைப்படுகிறீர்கள், யாரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு ராஷ்மிகா விஜய் சேதுபதியை காதலிக்க வேண்டும் எனவும் விஜயை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் நட்பு என்றால் விஜய் தேவரகொண்டா தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.