அரண்மனை 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக நடிகை ராஷிகண்ணா புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கில் பிரபலமான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வரிசையாக பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இறுதியாக கார்த்தியின் சர்தார் திரைப்படத்தில் நடித்து வரவேற்பை பெற்றிருந்த ராஷி கண்ணா அதையடுத்து ஃபார்ஸி என்னும் வெத்தொடரிலும் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார்.

இதனை தொடர்ந்து இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த அரண்மனை திரைப்படத்தின் நான்காவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக ராசி கண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே வெளியாகி இருந்த அரண்மனை மூன்றாவது பாகத்திலும் ராஷி கண்ணன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.