Ranveer Singh Marriage : திருமணத்திற்கு முன்பு ரன்வீர் சிங்கின் உடைகள் க்ளிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாலிவுட் சினிமாவின் முன்னணி பிரபலங்களான ரன்வீர் சிங்கிற்கும் தீபிகா படுகோனுக்கும் இத்தாலியில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பெரும்பாலும் எவ்வித புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகவில்லை.
திருமணத்திலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த படங்களில் கலந்து கொண்டனர். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் ரன்வீர் சிங்கின் உடைகள் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் திருமணத்தில் உடைகளை கிழிக்க என்ன காரணம் என தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர்.
இது குறித்து விசாரித்த போது உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது. சிந்து எனும் திருமண முறைப்படி திருமணத்திற்கு முன்பு மணமகன் உடையை உறவினர்கள் கிழிப்பது வழக்கமாம்.
அது தான் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் திருமணத்தில் நடந்துள்ளது. அந்த புகைப்படம் தான் கீழே இணைக்கப்பட்டுள்ளது.