நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ரங்கராஜ் பாண்டேவிற்கு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே அஜித்திற்கு எதிராக வாதாடும் வக்கீலாக நடித்திருந்தார்.
ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து அவருக்கு தற்போது ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆம், தமிழில் சுசீ கணேஷன் இயக்கிய திருட்டு பயலே 2 படம் தற்போது ஹிந்தியில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் பாபி சிம்ஹா வேடத்தில் வினீத்குமார் சிங் நடிக்கிறார். அமலாபால் வேடத்தில் ஊர்வசி ராட்டெலா மற்றும் பிரசன்னாவின் வேடத்தில் அபிஷேக் ஓபராய் நடிக்கிறார்.
தமிழில் சுசி கணேசன் நடித்த வேடத்தில் தான் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளாராம்.