நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ரங்கராஜ் பாண்டேவுக்கு பிரபல நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை எதிர்க்கும் வழக்கறிஞராக நேர்கொண்ட பார்வையில் நடித்திருந்தார் ரங்கராஜ் பாண்டே.
இந்த படத்தை தொடர்ந்து பாண்டே பாலிவுட் சினிமாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அவர் தமிழிலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம்.