எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும் என கூறியுள்ளார் ரம்பா.
Ramba About Her Cinema Re-entry : தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. அப்போதைய இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக இவர் தான் இருந்து வந்தார்.
ஆனால் திருமணத்திற்குப் பின்னர் தான் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின்னர் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அதன் பின்னர் மீண்டும் அவருடன் சேர்ந்து மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றி பேசியுள்ளார் ரம்பா.
எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும். நிறைய சண்டை போடுவோம். ஆனால் அதன் பின்னர் அவர் ஒரு கப் காபி போட்டுக் கொடுப்பார் எல்லாமே பறந்து போய்விடும்.
என்னுடைய குழந்தைகளுடன் நான் சந்தோஷமா வாழ்ந்து வருகிறேன். மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பீர்களா என கேட்கிறார்கள்.
நல்ல கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் ஆனால் பழையபடி என்னால் ஆடி பாடி நடிக்க முடியாது. தற்போது நான் ஒரு தாய் என கூறியுள்ளார்.
அதாவது முன்பைப் போல கவர்ச்சியாக எல்லாம் நடிக்க மாட்டேன் அடக்கமான வேடமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார்.