நான் செத்துட்டா ஸ்ரீ தேவி கல்லறைக்கு பக்கத்துல எரிச்சுடுங்க என எமோஷனலான பேசியுள்ளார் சூர்யா பட இயக்குனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்தியாவின் அத்தனை மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஸ்ரீ தேவி. இவரின் எதிர்பாராத இழப்பு இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் ஸ்ரீ தேவியின் நண்பரும் இயக்குனரான ராம் கோபால் வர்மா ரசிகர்களுடன் உரையாடிய போது என்னுடைய கடைசி ஒரு மணி நேரத்தை ஸ்ரீ தேவியின் கல்லறையில் கழிக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நான் இறந்து விட்டால் என்னுடைய உடலை ஸ்ரீ தேவியின் கல்லறைக்கு அருகில் தகனம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ராம் கோபால் வர்மா என்பவர் தமிழில் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.