கையெடுத்துக் கும்பிட்ட சென்னை போலீசை விமர்சனம் செய்துள்ளார் தெலுங்கு இயக்குனரான ராம்கோபால் வர்மா.
Ram Gopal Varma Comment on TN Police : கொரானா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் எந்தவித கட்டுப்பாடும் பயமுமின்றி சாலையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
ப்பா என்ன பெர்பாமன்ஸ்… வெறித்தனம் பாடலுக்கு டிக் டாக் செய்த இயக்குனரின் மகள் – வைரலாகும் வீடியோ.!
இதனால் நேற்று டிராபிக் போலீஸ் வருவ தயவுசெய்து வெளியே வராதீர்கள் என வாகன ஓட்டிகளிடம் கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களைகளில் வைரலாகியது.
இதுகுறித்து தெலுங்குத் திரையுலகம் சர்ச்சை இயக்குனரான ராம்கோபால் வர்மா இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டால் வேலைக்கு ஆகாது. பொதுமக்கள் உங்கள் தலை மீது ஏறி உட்கார்ந்து கொள்வார்கள் என அவரை விமர்சனம் செய்துள்ளார்.
ராம் கோபாலின் இந்த கருத்து பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
I request the police not to be friendly ????Otherwise the public will sit on your head ???? pic.twitter.com/nstcYMzxUw
— Ram Gopal Varma (@RGVzoomin) March 26, 2020